India
ரவுடி என்கவுண்டர் : உ.பி., போலிஸின் பொய்யை அம்பலப்படுத்திய ம.பி., போலிஸ்!
உத்தரபிரதேசத்தில் 8 போலிஸைக் கொன்ற ரவுடி விகாஸ் துபே கடந்த வாரம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மத்திய பிரதேச போலிஸாரால் பிடிக்கப்பட்ட துபே, உத்தர பிரதேச போலிஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.
துபேவை கான்பூர் அழைத்துச் செல்லும் வழியில், கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும், அப்போது தங்களிடம் இருந்து துப்பாக்கியை பறித்து சுட்டு தப்பிக்க முயன்றாதகவும், அதனால் சுட்டுக் கொன்றதாகவும் உ.பி காவல்துறை தெரிவித்தது.
துபேவுக்கு பின் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் போலிஸாரை காப்பாற்றவே யோகி ஆதித்யநாத் அரசு இந்த என்கவுண்டரை செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேச போலிஸார் கூறும் தகவல்கள் சிலவற்றை மத்திய பிரதேச போலிஸார் மறுத்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துபேவை கைது செய்த போலிஸார் அவரை முதலி உஜ்ஜெய்ன் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அப்போது அவர் தப்பிக்க முயற்சி செய்ததாகவும் உத்தர பிரதேச போலிஸார் தெரிவித்துள்ளனர். இதனாலேயே தங்களிடம் இருந்து தப்ப முயன்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உ.பி., காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதை அப்படியே மறுக்கிறது மத்திய பிரதேச காவல் துறை. துபேவை காவல் நிலையத்துக்கே அழைத்துச் செல்லவில்லை என்றும், நேரடியாக உத்தர பிரதேச போலிஸிடம் தான் ஒப்படைத்தோம் என்றும், தப்பி ஓட துபே முயற்சிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
போலிஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கு தைரியம் கொடுத்த முக்கியப் புள்ளிகளை காக்கவே இந்த நாடகமா என்ற சந்தேகம் ஒவ்வொரு கட்டமாக வலுத்து வருகிறது.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!