India
"கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை நசுக்குவதை ஏற்க முடியாது” - ராகுல் காந்தி ஆவேசம்!
கொரோனாவுக்கு எதிரான போரில் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குரலை நசுக்குவதற்கு அனுமதிக்கமாட்டோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாகவும், பா.ஜ.க அரசின் தோல்விகளாலும் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சில மாநிலங்கள் தொழிலாளர் சட்டங்களை சில காலத்திற்கு நிறுத்தி வைக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொழிலாளர் சட்டங்களை நிறுத்தி வைப்பதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது தொழிலாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “தொழிலாளர் சட்டங்கள் பல மாநிலங்களால் திருத்தப்படுகின்றன. கொரோனா தொற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுகிறோம்.
ஆனால் மனித உரிமைகளை நசுக்குவதற்கும், பாதுகாப்பற்ற பணியிடங்களை அனுமதிப்பதற்கும், தொழிலாளர்களை சுரண்டுவதற்கும் அவர்களின் குரல்களை அடக்குவதற்கும் அனுமதிக்க முடியாது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அடிப்படைக் கொள்கைகளில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.50 இலட்சத்தில் பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவனுக்கு திருவுருவச் சிலை... திறந்து வைத்தார் முதலமைச்சர் !
-
“தமிழ்நாட்டில் பொய்யும், ஒப்பனையும், கற்பனையும் ஒருபோதும் நீடிக்காது” - RN ரவிக்கு கி.வீரமணி பதிலடி!
-
ஈரோடு மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?
-
“திமிரெடுத்து பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவி.யின் திமிரை நாம் அடக்க வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ஈரோடு - 1,84,491 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் : 23 புதிய திட்டப் பணிகள்!