India
“தனியார் மருத்துவமனைகளை திறக்காவிட்டால் உரிமம் ரத்து” - புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை! #Corona
புதுச்சேரியில் திறக்கப்படாமல் இருக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
கொரோனா தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
“புதுச்சேரியில் கடந்த 15 நாட்களாகவே எந்தவித தொற்றும் இல்லாமல் உள்ளது. நேற்று ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார். 5 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்ற்னர். 3,915 பேர் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி பிராந்தியத்தில் காரைக்கால், ஏனாம், மாஹே பகுதிகள் தொற்று இல்லாத பகுதியாக உள்ளது. நேற்று 65 பேருக்கு தொற்று இருக்கின்றதா என்று சோதனை செய்ததில் 63 பேருக்கு தொற்று இல்லை எனத் வந்துள்ளது.
இனி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முழுவீச்சில் செயல்படும். கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படும். அவசர காலத்தில் சில மருத்துவமனைகள் செயல்படவில்லை என புகார் வருகிறது. உத்தரவை மதிக்காத மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.
வீடு வீடாகச் சென்று மருத்துவ பணியாளர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவரை 8 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
வரும் வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துளள்னர். அதனால் வரும் நாட்களில் புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வோடு செயல்படவேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும், முகக் கவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் தொடரும் போராட்டம்.. ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி.. கடும் தள்ளுமுள்ளு!
-
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. முடிவுக்கு வந்த போராட்டம்.. அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு.. வரலாற்று நிகழ்வு!
-
“மேகதாது விவகாரம்.. விஷப் பரீட்சை வேண்டாம்” : தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“நான் விஜய் Fan..” : மாணவர்கள் போராட்டத்தில் பேச்சு.. மூக்குடைபட்டு திரும்பிய சனம் செட்டி - என்ன நடந்தது?
-
தி.மு.க எப்போதும் உங்கள் பக்கமே நிற்கும் : சென்னையில் நடைபெறும் நீட் போராட்டத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!