India
“21 நாள் ஊரடங்கை புத்தகம் வாசித்துக் கழியுங்கள்...” - இலவசமாக புத்தகங்கள் வழங்கும் நேஷனல் புக் டிரஸ்ட்!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 13 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முதல் 21 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காக தவிர எவரும் வெளியே வரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் தங்கள் ஊரடங்கு ஓய்வுக்காலத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க, தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust) தமிழ் உள்பட 18 மொழிகளில் தேர்ந்தெடுத்த சிறந்த புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள அனுமதித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலமான 21 நாட்களை மக்கள் ஆக்கபூர்வமான வழியில் செலவிட வேண்டும் என்கிற நோக்கிலும், குழந்தைகளுக்குப் படிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும் எனும் நோக்கிலும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், தேசிய புத்தக அறக்கட்டளை வாயிலாக இலவசப் புத்தகப் பதிவிறக்கத்தை அனுமதித்துள்ளது.
அந்தகையில், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 18 மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 100 புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய அனுமதித்துள்ளது தேசிய புத்தக அறக்கட்டளை.
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், தமிழில் மிகக்குறைவான புத்தகங்களே இலவச பதிவிறக்க பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இதை அறிமுகப்படுத்தி வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.
வாசிப்பதற்கான இணையதள முகவரி : https://www.nbtindia.gov.in/
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!