India
டாஸ்மாக்கை மூடாத அரசு: கொரோனா முன்னெச்சரிக்கை பணியில் மதுக்கடைகள்- குடிமகன்களுக்கிடையே 1 மீட்டர் இடைவெளி!
மதுபானக் கடைகளில் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமல், போதிய இடைவெளி விட்டு வரிசையில் நின்று மதுபானம் வாங்க புதிய வழிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பொது போக்குவரத்தைப் பயன்படுத்தவேண்டாம், முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும், அவ்வப்போது கிருமி நாசினிகளைக் கொண்டு கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மார்ச் 22ம் தேதி 'மக்கள்-ஊரடங்கு' என்ற முறையில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி பிரதமர் மோடியும் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால்கள், ஜவுளி கடைகள், நகை கடைகள், மதுபான பார்கள், ஹோட்டல்கள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவை மூடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடவேண்டும் என பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தி வந்தாலும், அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், மதுபானக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் குடிமகன்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமல், போதிய இடைவெளி விட்டு வரிசையில் நின்று மதுபானம் வாங்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியிலிருந்து குளூர் செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் குடிமகன்கள் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டு நிற்காமல் பத்தடி இடைவெளி விட்டு நிற்பதற்காக கோடுகள் வரையப்பட்டுள்ளன. அதன்படி, குடிமகன்கள் இடைவெளி விட்டு நின்று வெயிலில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.
புதுச்சேரி மாநிலம் கரையாம்புத்தூர் பகுதியிலுள்ள மதுபான கடையிலும் ஒரு மீட்டர் இடைவெளியில் மதுபானம் வாங்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டு கோடு போடப்பட்டுள்ளது.
இவற்றைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
Also Read
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!
-
“கிரீன்லாந்து விற்கப்படுவதற்கான சொத்து அல்ல; அது மக்களின் உரிமை”: ட்ரம்ப்-க்கு டென்மார்க் பிரதமர் பதிலடி!