India
“டெல்லி வன்முறையை திசைதிருப்ப கொரோனா பீதியைக் கிளப்பவேண்டாம்” : மோடி அரசுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை!
உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 3 நாட்களில், இத்தாலி சுற்றுலா பயணிகள் 16 பேர் உட்பட 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்குவங்கத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி, “டெல்லி வன்முறை சம்பவத்தை திசைதிருப்பவே கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தை மத்திய பா.ஜ.க அரசு கிளப்புகிறது.
இந்தியாவிற்கு கொரோனா வந்துவிட்டதாக கத்திக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா ஒரு கொடிய நோய் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதனை சாதகமாகப் பயன்படுத்தி மத்திய அரசு பீதியைக் கிளப்ப வேண்டாம்.
டெல்லி வன்முறை என்ற உண்மையான கொரோனா வைரஸை மறக்கச் செய்ய, டி.வி சேனல்கள் மூலம் அவர்கள் கொரோனா வைரஸை சுற்றி ஒரு மிகைப்படுத்தலை உருவாக்குகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஏன் வெளியே சென்றார்கள் : ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் - பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!
-
பீகார் தேர்தல் - பா.ஜ.க ஆசையில் மண்ணைப் போட்டது 'இந்தியா' கூட்டணி : முரசொலி!
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!