India
2017-19ல் ரயிலில் 165 பலாத்காரங்கள்.. எங்கே போனது பெண்கள் பாதுகாப்பு? - RTI மூலம் அம்பலம்!
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதனால், நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. இப்படி இருக்கையில், ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பெண்களுக்கு நிகழும் பாலியல் ரீதியிலான கொடுமைகள் குறித்த விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர் ஒருவர், ஓடும் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகள் உள்ளிட்ட விவரங்களை ஆர்.டி.ஐ மூலம் கேட்டிருந்தார்.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் அளித்த பதிலில், கடந்த 2017-19 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் 165 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகவும், ஓடும் ரயில்களில் 136 பெண்களும், ரயில் நிலையங்களில் 29 பெண்களும் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2019ம் ஆண்டில் 44ம், 2018ல், 70ம், 2017ல் 51 பலாத்கார சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதுபோக, கடந்த 3 ஆண்டுகளில் 1,672 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றுள்ளன.
ஓடும் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும், 542 கொலைகள், 4,718 கொள்ளை, 213 கொலை முயற்சி, 771 ஆள் கடத்தல் ஆகியவரை நடந்துள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், பெண்கள் கம்பார்ட்மென்ட்டில் பயணித்ததாக கடந்த 2018,2019ம் ஆண்டுகள் முறையே 1,39,422 மற்றும் 1,14,170 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
“3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - 41 புதிய ITI நிலையங்கள் ” : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
-
அமெரிக்க பொருட்களுக்கு 0% வரி; இந்திய பொருட்களுக்கு 18% வரியா? - கனிமொழி MP கேள்வி!