India
“குழந்தைகள் வாழமுடியாத மோசமான நாடாக மாறிய இந்தியா”: மோடி ஆட்சியின் சாதனை இதுதானா? - அதிர்ச்சி தகவல்!
உலக சுகாதார நிறுவனம், யுனிசெப், லாண்செட் மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து உலகம் முழுவதும் 180 நாடுகளில் குழந்தைகளுக்கான நல்வாழ்வு குறித்தும் அவர்களுக்கு ஏற்ற சுற்றுச்சூழல் பற்றியும் அண்மையில் ஆய்வு மேற்கொண்டது.
40 குழந்தைகள் நல நிபுணர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்று, நிலைத் தன்மை மற்றும் செழிப்புக் குறியீடு ஆகிய இரண்டு பிரிவுகளில் இந்த ஆய்வை நடத்தினர்.
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், பிரசவ கால குழந்தை இறப்பு, குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், சுகாதாரம், தூய்மை மற்றும் தீவிர ஏழ்மை இல்லாமை, கல்வி வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுதந்திரம், வன்முறையில் இருந்து பாதுகாப்பு போன்றவையும் செழிப்புக் குறியீடுகளில் அடங்கும்.
இதன்படி நிலைத்தன்மை குறியீட்டில், குழந்தைகளுக்கு உகந்த சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய வாழ்வு ஆகியவை அடங்கு. அதன்படி, நிலைத்தன்மை குறியீட்டில் 180 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 77-வது இடமே கிடைத்துள்ளது.
அதேப்போல் செழிப்புத் திறன் குறியீட்டில், இன்னும் மோசமாக 131-வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த செழிப்புத் திறன் குறியீட்டு பட்டியலில், ஆசிய நாடுகளான சிங்கப்பூர் 12-வது இடத்தையும், சீனா 43-வது இடத்தையும், சிறிய நாடான இலங்கை 68-வது இடத்தையும் பெற்று இந்தியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளன.
பாகிஸ்தான் 140-வது இடத்தையும், வங்கதேசம் 143-வது இடத்தையும் பெற்றுள்ளன. குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு, நல்ல ஆரோக்கியம், கல்வி, ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றை வழங்கும் நாடுகள் பட்டியலில், நார்வே முதல் இடத்தை பிடித்துள்ளது. தென்கொரியா இரண்டாவது இடத்தையும், நெதர்லாந்து 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஆனால் மோடியின் கடந்த கால ஆட்சியில் இருந்து தற்போது வரை மக்கள் எல்லாவகையான சிரமங்களையும் சந்தித்து வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!