India
தப்பித்த தோனி... மாட்டிக்கொண்ட சாய்னா நேவால்..! - ஆட்டமும் அரசியலும்!
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காலூன்றுவதற்காக, அங்கு பிரபலமாக இருப்பவர்களை கட்சிக்குள் இழுக்கும் வேலையை பா.ஜ.க திறம்பட செய்து வருகிறது.
அந்த வகையில், கிரிக்கெட் வீரர் கம்பீர், ஹாக்கி வீரர் சந்தீப் சிங் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் பா.ஜ.கவில் இணைந்து தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.
இந்நிலையில், பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பா.ஜ.கவில் இணைந்துள்ளார். ஹரியானாவை சேர்ந்த சாய்னா நேவால் இந்தியாவுக்காக பேட்மின்டன் விளையாட்டில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது திட்டங்களையும் அடிக்கடி பாராட்டி கருத்துகளையும் பதிவிட்டு வந்த சாய்னா நேவால் இன்று டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் தேசிய செயலாளர் அருண்சிங் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கிரிக்கெட் வீரர் தோனியை ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்கு தோனி மறுத்திருந்தார். அதேபோல பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவும் தோனி மறுத்திருந்தார் என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, அதற்கு பழிவாங்கும் விதமாக தோனியை இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டும் விதத்தில் பா.ஜ.க செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!