India
தப்பித்த தோனி... மாட்டிக்கொண்ட சாய்னா நேவால்..! - ஆட்டமும் அரசியலும்!
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காலூன்றுவதற்காக, அங்கு பிரபலமாக இருப்பவர்களை கட்சிக்குள் இழுக்கும் வேலையை பா.ஜ.க திறம்பட செய்து வருகிறது.
அந்த வகையில், கிரிக்கெட் வீரர் கம்பீர், ஹாக்கி வீரர் சந்தீப் சிங் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் பா.ஜ.கவில் இணைந்து தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.
இந்நிலையில், பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பா.ஜ.கவில் இணைந்துள்ளார். ஹரியானாவை சேர்ந்த சாய்னா நேவால் இந்தியாவுக்காக பேட்மின்டன் விளையாட்டில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது திட்டங்களையும் அடிக்கடி பாராட்டி கருத்துகளையும் பதிவிட்டு வந்த சாய்னா நேவால் இன்று டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் தேசிய செயலாளர் அருண்சிங் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கிரிக்கெட் வீரர் தோனியை ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்கு தோனி மறுத்திருந்தார். அதேபோல பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவும் தோனி மறுத்திருந்தார் என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, அதற்கு பழிவாங்கும் விதமாக தோனியை இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டும் விதத்தில் பா.ஜ.க செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !