India
“அதீத வரி, அரசு இழைக்கும் சமூக அநீதி” : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே பேச்சு!
வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டதன் 79வது ஆண்டு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “நாட்டின் வளங்கள் பரவலாவதில் வரித் துறை தீர்ப்பாயங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. தீர்ப்பாயங்களில் விரைவாக கிடைக்கும் தீர்ப்பினால் வரி செலுத்துவோர் பயனடைகின்றனர்.
வரி ஏய்ப்பு என்பது நாட்டு மக்களுக்கு செய்யும் அநீதி, நியாயமற்ற அதீத வரி விதிப்பு, அரசே மக்களுக்குச் செய்யும் சமூக அநீதி”
Also Read: “மோடி ஆட்சியில் இந்தியா செல்லும் திசையை நினைத்து உலகமே திகைத்துள்ளது” : எச்சரிக்கும் ப.சிதம்பரம்!
மேலும், இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மையும், விலைவாசி உயர்வும் ஒரு பொருளாதார அவசரநிலையை ஏற்படுத்தி வருகிறது” என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, விமர்சித்தார்.
இன்னும் ஒரு சில நாட்களில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதீத வரி விதிப்பு குறித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
Also Read
-
பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வு : தோல்வியை மறைக்க ஒன்றிய அரசு முயற்சி - உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுவதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“திசை திருப்பும் உக்தியை செய்கிறது தவெக.. ஆதவ் வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும்”: சிவசங்கர் எச்சரிக்கை!
-
மாணவர்களின் கல்வி கனவை பறிப்பதா? - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு: RS.பாரதி அறிக்கை!
-
“நீட் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக” : பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!