India
இந்தப் படத்தைத் தான் பா.ஜ.கவினர் எதிர்த்தார்கள்.. புதிய திட்டமே இயற்றிய உத்தரகாண்ட் அரசு!
நடிகை தீபிகா படுகோன் நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவாகி வெளியான திரைப்படம் ‘சப்பாக்’. இந்தப் படம் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ளது.
ஆசிட் வீச்சு பாதிப்புக்குள்ளான ஒரு பெண்ணின் உண்மைக் கதையைக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் திரைப்படக் கருத்தால் ஈர்க்கப்பட்டு உத்தரகாண்ட் பா.ஜ.க அரசு தனது மாநிலத்தில், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பென்சன் திட்டம் என்ற ஒரு புது திட்டத்தையே அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் 5,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரையில் பென்சன் வழங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் படத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளதாக படக்குழு மகிழ்ச்சி தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!