India
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரகளை : 100க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறை!
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும், வாகனங்களில் வேகமாக செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படுவதோடு, உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.
இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க இந்தாண்டு நகர்ப்பகுதிகளில் அதிகப்படியான போலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி விபத்துகளைத் தவிர்க்க திட்டமிட்டனர். அதன்படி இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் சென்னை முழுவதும் எல்.இ.டி விளக்குகளை பொருத்தியும், தடுப்பு பலகை அமைத்தும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிவேகமாகச் சென்றவர்களை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் அதிக ஒலி எழுப்பும்படியான இருசக்கர வாகனங்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். சென்னை முழுவதும் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்ட இளைஞர்களையும் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
Also Read
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!
-
அரசின் அனுமதி வாங்கி தருவதாக பண மோசடி.. தவெக பிரமுகர் அதிரடி கைது!
-
“லிஃப்ட்” தருவதாக கூறி 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்!