India
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரகளை : 100க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறை!
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும், வாகனங்களில் வேகமாக செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படுவதோடு, உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.
இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க இந்தாண்டு நகர்ப்பகுதிகளில் அதிகப்படியான போலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி விபத்துகளைத் தவிர்க்க திட்டமிட்டனர். அதன்படி இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் சென்னை முழுவதும் எல்.இ.டி விளக்குகளை பொருத்தியும், தடுப்பு பலகை அமைத்தும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிவேகமாகச் சென்றவர்களை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் அதிக ஒலி எழுப்பும்படியான இருசக்கர வாகனங்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். சென்னை முழுவதும் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்ட இளைஞர்களையும் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!