India
2019-20 முதல் பாதியில் நடந்த வங்கி முறைகேடுகள் : ஆர்.பி.ஐ அதிர்ச்சி தகவல்
நாட்டின் நிதி நிலைத்தன்மை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. அதில், கடந்த நிதியாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நடைபெற்ற வங்கி மோசடிகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2019-20ஆம் நிதியாண்டில், ரூ.50 கோடிக்கு மேல் 398 வங்கிகளில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடிக்கு மோசடிகளும், ரூ.1000 கோடிக்கு மேல் 21 வங்கிகளில் ரூ.44,951 கோடிக்கு மோசடிகளும் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வங்கி மோசடிகள் நடைபெற்றுள்ளன. இதேபோல, கடந்த 2018-19ம் நிதியாண்டில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் ரூ.71,543 கோடிக்கு மோசடிகள் நடந்துள்ளன என ரிசர்வ் வங்கி ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
வாராக்கடன்களின் நிலவரமே இன்னும் சீராகாத நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே ஒரு லட்சம் கோடிக்கு மோசடி நடைபெற்றிருப்பது வங்கிகளின் நிர்வாகத் திறனின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்றும், மேன்மேலும் மோசடிகள் நடைபெறாத வண்ணம் ரிசர்வ் வங்கி கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு..” - விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!