India
2019-20 முதல் பாதியில் நடந்த வங்கி முறைகேடுகள் : ஆர்.பி.ஐ அதிர்ச்சி தகவல்
நாட்டின் நிதி நிலைத்தன்மை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. அதில், கடந்த நிதியாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நடைபெற்ற வங்கி மோசடிகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2019-20ஆம் நிதியாண்டில், ரூ.50 கோடிக்கு மேல் 398 வங்கிகளில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடிக்கு மோசடிகளும், ரூ.1000 கோடிக்கு மேல் 21 வங்கிகளில் ரூ.44,951 கோடிக்கு மோசடிகளும் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வங்கி மோசடிகள் நடைபெற்றுள்ளன. இதேபோல, கடந்த 2018-19ம் நிதியாண்டில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் ரூ.71,543 கோடிக்கு மோசடிகள் நடந்துள்ளன என ரிசர்வ் வங்கி ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
வாராக்கடன்களின் நிலவரமே இன்னும் சீராகாத நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே ஒரு லட்சம் கோடிக்கு மோசடி நடைபெற்றிருப்பது வங்கிகளின் நிர்வாகத் திறனின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்றும், மேன்மேலும் மோசடிகள் நடைபெறாத வண்ணம் ரிசர்வ் வங்கி கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!