India
2019-20 முதல் பாதியில் நடந்த வங்கி முறைகேடுகள் : ஆர்.பி.ஐ அதிர்ச்சி தகவல்
நாட்டின் நிதி நிலைத்தன்மை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. அதில், கடந்த நிதியாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நடைபெற்ற வங்கி மோசடிகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2019-20ஆம் நிதியாண்டில், ரூ.50 கோடிக்கு மேல் 398 வங்கிகளில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடிக்கு மோசடிகளும், ரூ.1000 கோடிக்கு மேல் 21 வங்கிகளில் ரூ.44,951 கோடிக்கு மோசடிகளும் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வங்கி மோசடிகள் நடைபெற்றுள்ளன. இதேபோல, கடந்த 2018-19ம் நிதியாண்டில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் ரூ.71,543 கோடிக்கு மோசடிகள் நடந்துள்ளன என ரிசர்வ் வங்கி ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
வாராக்கடன்களின் நிலவரமே இன்னும் சீராகாத நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே ஒரு லட்சம் கோடிக்கு மோசடி நடைபெற்றிருப்பது வங்கிகளின் நிர்வாகத் திறனின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்றும், மேன்மேலும் மோசடிகள் நடைபெறாத வண்ணம் ரிசர்வ் வங்கி கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“சபரிவர்மனின் மர*த்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!