India
#CAA இந்தியாவை மத ரீதியாகப் பிளவுபடுத்த முயற்சிக்கிறது பா.ஜ.க : மம்தா பானர்ஜி
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் 4வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் போராட்டத்தின் போது பேசிய மம்தா பானர்ஜி, “குடியுரிமை சட்டத் திருத்தம் தேவையா இல்லையா என ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கண்காணிப்பில் மக்களிடம் கருத்து கேட்பு நடத்த பா.ஜ.க.,வால் முடியுமா?
நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் குடிமக்கள் தான் என நிரூபிக்க வேண்டும் என கேட்கும் பா.ஜ.க 1980ம் ஆண்டுக்கு முன்னால் அதன் வாலும், தலையும் எங்கே இருந்தது என நிரூபிக்க முடியுமா?
இந்தியாவை மத ரீதியாக பிளவுபடுத்த பார்க்கிறது பா.ஜ.க. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெரும் வரை நாம் போராட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!