India
இதுவரை FASTAG அட்டை பெறாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!
தேசிய நெஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தானியங்கி முறையில் கட்டணம் செலுத்தும் விதமாக மத்திய அரசு ஃபாஸ்டேக் (FasTag) என்ற முறையை அறிமுகப்படுத்தியது.
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் ஆதார், வாகன சான்றிதழ், ஃபோட்டோ ஆகியவற்றை ஆதாரங்களாக கொடுத்து ஃபாஸ்டேக் அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த ஃபாஸ்டேக் முறை டிசம்பர் 15ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும், அதற்குள் ஃபாஸ்டேக் அட்டையை வாகன ஓட்டிகள் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஃபாஸ்டேக்கை பெறுவதற்கு வங்கிகளில் போதிய அட்டைகள் இல்லாததாலும், பேடிஎம், அமேசான் போன்ற ஆன்லைன் சேவை நிறுவனங்கள் மூலம் விண்ணப்பித்தும் ஆர்டர் கேன்சல் ஆனதால் வாகன ஓட்டிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நாளை முதல் ஃபாஸ்டேக் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு விண்ணப்பிக்க மேலும் 1 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது மத்திய சாலை போக்குவரத்துத் துறை. மேலும் ஜனவரி 15ம் தேதி ஃபாஸ்டேக் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஃபாஸ்டேக் அட்டையை பெற்றவர்கள் அதன் மூலம் சுங்கக் கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஃபாஸ்டேக்கை பெறாதவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!