India
இலக்கை மீறி 102% தாண்டிய நிதிப்பற்றாக்குறை... என்ன செய்யப்போகிறது பா.ஜ.க. அரசு?
நடப்பு ஆண்டின் அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி, செலவினம் மற்றும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசம் 7 லட்சத்து இருபதாயிரத்து 445ஐ தொட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவினம் 27 லட்சத்து 86 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், அரசின் மொத்த செலவினம் 16 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை அளவை, 3.3 சதவிகிதம் என்ற அளவில் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. அதன் படி, நடப்பு நிதியாண்டின் நிதி பற்றாக்குறை 7 லட்சத்து 3 ஆயிரம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் இந்த இலக்கை மீறி முதல் 7 மாதங்களிலேயே நிதிப்பற்றாக்குறை தாண்டியுள்ளது. நிதிப்பற்றாக்குறைக்கு அதிகரிப்புக்கு மத்திய அரசின் வரி வருவாய் குறைந்து போனதே காரணம் எனக் கூறப்படுகிறது.
Also Read
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!