India
வேகமாகக் குறையும் நிலத்தடி நீர் மட்டம் : தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்க வழி சொல்லும் ஜல்சக்தி துறை அமைச்சர்
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழத்திற்குச் சென்று ஆபத்தான நிலையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜல்சக்தி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 22% அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் கீழிறங்கி விட்டது. தமிழ்நாட்டில் 541 பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆபத்தான நிலையில் அதிக ஆழத்திற்குச் சென்றுவிட்டது.
அடுத்தபடியாக ராஜஸ்தானில் 218 பகுதிகளிலும், உத்திரப் பிரதேசத்தில் 139 பகுதிகளிலும், தெலுங்கானாவில் 137 பகுதிகளிலும், பஞ்சாப்பில் 111 பகுதிகளிலும், ஹரியானாவில் 81 பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்குச் சென்றுவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேளாண்துறையில் 10% அளவிற்கு தண்ணீரை சேமிப்பதன் மூலம் நாட்டில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு நீர் பற்றாக்குறையை குறைக்க முடியும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், வேளாண்துறைக்கு தற்போது 89% தண்ணீர் பயன்படுத்தப்படுவதாகவும், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நீர்த்தெளிப்பானை பயன்படுத்த ஊக்கமளித்தால், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தமிழ்நாட்டில் இந்த இருமல் மருந்தின் உரிமங்கள் முழுமையாக ரத்து” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!
-
“‘சுயமரியாதை’ என்ற சொல்லே அனைவருக்கும் வேண்டிய சொல்! வெல்லும் சொல்!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!