India
“ஹிட்லரின் தங்கை போல் செயல்படுகிறார் கிரண்பேடி” : புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு!
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அரசு அதிகாரங்களில் தலையிட்டு பணிகளை செய்யவிடாமல் மாநில அரசின் பணிகளை முடக்குவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கிரண்பேடியின் அதிகார மீறல்களை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றுள்ளார் அம்மாநில முதல்வர் நாராயணசாமி.
இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102-வது பிறந்தநாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, எந்த அதிகாரங்களும் இல்லாமல், அரசு அதிகாரிகளை மிரட்டும் வேலைகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஈடுபட்டு வருகிறார். மேலும் மாநில மக்களின் வளர்ச்சி பற்றி கவலைப்படாமல் புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, அதிகாரிகளை தினந்தோறும் வசைபாடும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஹிட்லரின் தங்கை போல செயல்படுகிறார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
மேலும், பொது இடத்தில் தலைவர்களின் சிலைி வைக்கக்கூடாது என்று கிரண்பேடி கூறியதற்கு முதல்வர் நாராயணசாமி, சிலை வைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம், என்றும் விதிகளை மீறி நடக்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள் விரைவில் சிறை செல்வார்கள் எனவும் நாராயணசாமி கூறினார்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!