India
லாபத்தில் 99% வீழ்ச்சி - மோடியாலும் காப்பாற்ற முடியாத நிலையில் அதானி பவர் நிறுவனம்
மோடி ஆட்சியில் நிலவி வரும் பொருளாதார சரிவால் முன்னணி தொழில் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துவருகின்றன. அந்தவகையில் அதானியின் நிறுவனம் கடும் நெருக்கடியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய தனியார் மின் உற்பத்தி நிலையமான அதானியின் பவர் நிறுவனம், பொருளாதார நெருக்கடியால் கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக 2019-ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டில் மொத்த வருவாய் 5 ஆயிரத்து 915.69 கோடியாக குறைந்துள்ளது. இதே கடந்தாண்டு 7 ஆயிரத்து 104.22 கோடி ரூபாயாக இருந்தது.
இந்த நிறுவனத்தின் லாப மதிப்பிட்டை ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் 33.25 கோடி நிகர லாபம் அடையும் என மதிப்பிட்டிருந்தது. அதில் தற்போது 99 சதவீதம் அளவுக்கு சரிந்து நிகர லாபத்தின் மதிப்பு 3.88 கோடியாகவும், ஆண்டு வருவாயில் வருவாயில் 17 சதவீதம் குறைந்து 5 ஆயிரத்து 916 கோடியாகவும் உள்ளது.
அதேபோல், பவர் நிறுவனத்தின் ஓர் ஆலையில் உற்பத்தி மட்டும் 65 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாகக் குறைந்துவிட்டது, அதேபோல் கடந்தாண்டு முன்பு இருந்த 14.6 பில்லியன் யூனிட் உற்பத்திகளிலிருந்து 13.6 பில்லியன் யூனிட்டுகளாக குறைந்துள்ளது.
அதானியின் மற்ற பலத்துறைகளில் ஓரளவு லாபத்தை அடைந்திருந்தாலும் இந்த மின் உற்பத்தி நிலையம் மட்டும் கடும் சரிவை சந்தித்திருப்பது அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பங்கு சந்தைகளிலும் அதானியின் பங்குகள் சரிந்துவருகின்றன.
எந்த கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக மோடி அரசு செயல்படுகிறதோ, பொருளாதார சரிவு அந்த நிறுவனத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!