India

செர்பியா செல்கிறார் தி.மு.க எம்.பி கனிமொழி!

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் 141வது தூதுக் குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை உறுப்பினர்கள் அக்டோபர் 12 முதல் 18ம் தேதி வரை செர்பியாவில் நடைபெறவுள்ள சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் குழுவில் தி.மு.க மக்களவைத் துணைத் தலைவர் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சசி தரூர், பாரதிபென் திருபாய் ஷ்யால், ராம் குமார் வர்மா, சாஸ்மித் பத்ரா உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இன்று இந்தியாவில் இருந்து புறப்பட்டு செர்பியா செல்லும் தி.மு.க எம்.பி., கனிமொழி, வரும் 19ம் தேதி தாயகம் திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.