India
அசோக் லேலாண்ட், மாருதி வரிசையில் உற்பத்தி நிறுத்ததை அறிவித்தது போஷ் இந்தியா!
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக பல்வேறு முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன.
விற்பனை சரிவு, உற்பத்தி தேக்கத்தால் அசோக் லேலாண்ட், மஹிந்திரா, மாருதி போன்ற பல ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வேலையாட்களுக்கு விடுமுறை அளித்து வருகின்றன.
இது போன்ற உற்பத்தி நிறுத்த அறிவிப்புகள் வாகனங்களுக்கு உதிரி பாகத்தை தயாரிக்கும் நிறுவனங்களையும் கடுமையாக பாதித்துள்ளது.
அந்த வரிசையில், பிரபல வாகன உதிரி பாகம் தயாரிப்பு நிறுவனமான போஷ் இந்தியா அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 10 நாட்கள் வீதம் உற்பத்தியை நிறுத்த முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள போஷ் இந்தியா ஆலைகள் 30 நாட்களுக்கு மூடப்பட இருக்கின்றன. இந்த உற்பத்தி நிறுத்த அறிவிப்பு போஷ் இந்தியா நிறுவனத்தைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!