India
அடுத்து வருகிறது ‘ஒரே நாடு ஒரே சுங்க கட்டணம்’ : மத்திய அரசு திட்டம்!
வாடகை கார்கள், ஆம்னி பேருந்துகள், லாரிகளுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் செலுத்தும் திட்டத்தை டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போதும் தனித்தனியாக சுங்கக் கட்டணம் செலுத்தப்படுகிறது. இதனை மாற்றி ஒருமுறை கட்டணம் செலுத்தினால் நாடு முழுதும் பயணிக்கும் வகையில் டோல் கட்டணத்தை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தலைமையில் நடைபெற உள்ளது.
ஃபாஸ்ட் டேக் (FASTag) என்ற பெயரில் கொண்டுவரப்பட உள்ள இந்த திட்டத்தால் வாடகை கார்கள், ஆம்னி சுற்றுலா பேருந்துகள், லாரிகள் இயக்குவோர் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், வரைவு கட்டண விபரங்கள் குறித்த தகவல்கள் எதனையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை.
Also Read
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
-
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !