India
அடுத்து வருகிறது ‘ஒரே நாடு ஒரே சுங்க கட்டணம்’ : மத்திய அரசு திட்டம்!
வாடகை கார்கள், ஆம்னி பேருந்துகள், லாரிகளுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் செலுத்தும் திட்டத்தை டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போதும் தனித்தனியாக சுங்கக் கட்டணம் செலுத்தப்படுகிறது. இதனை மாற்றி ஒருமுறை கட்டணம் செலுத்தினால் நாடு முழுதும் பயணிக்கும் வகையில் டோல் கட்டணத்தை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தலைமையில் நடைபெற உள்ளது.
ஃபாஸ்ட் டேக் (FASTag) என்ற பெயரில் கொண்டுவரப்பட உள்ள இந்த திட்டத்தால் வாடகை கார்கள், ஆம்னி சுற்றுலா பேருந்துகள், லாரிகள் இயக்குவோர் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், வரைவு கட்டண விபரங்கள் குறித்த தகவல்கள் எதனையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை.
Also Read
-
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... Fastag இல்லையென்றால் இருமடங்கு கட்டணம்.. வருகிறது புதிய நடைமுறை!
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”தேசத்தை காக்க தி.க, தி.மு.க தான் மருந்து” : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் ஆ.ராசா.எம்.பி பேச்சு!
-
இனி பழைய பொருட்களை அகற்ற கவலை வேண்டாம் : சென்னை மாநகராட்சியின் அசத்தலான திட்டம்!
-
துன்பம் வரும்போது நம்மைக் காப்பவர் யார்? கைவிடுவோர் யார்? : மக்களுக்கு உணர்த்திய கரூர் துயரம்!