India
அடுத்து வருகிறது ‘ஒரே நாடு ஒரே சுங்க கட்டணம்’ : மத்திய அரசு திட்டம்!
வாடகை கார்கள், ஆம்னி பேருந்துகள், லாரிகளுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் செலுத்தும் திட்டத்தை டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போதும் தனித்தனியாக சுங்கக் கட்டணம் செலுத்தப்படுகிறது. இதனை மாற்றி ஒருமுறை கட்டணம் செலுத்தினால் நாடு முழுதும் பயணிக்கும் வகையில் டோல் கட்டணத்தை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தலைமையில் நடைபெற உள்ளது.
ஃபாஸ்ட் டேக் (FASTag) என்ற பெயரில் கொண்டுவரப்பட உள்ள இந்த திட்டத்தால் வாடகை கார்கள், ஆம்னி சுற்றுலா பேருந்துகள், லாரிகள் இயக்குவோர் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், வரைவு கட்டண விபரங்கள் குறித்த தகவல்கள் எதனையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை.
Also Read
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெறிவோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!