India
வர்த்தக சரிவு: இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் ஃபோர்டு; மஹிந்திராவிடம் பங்குகளை விற்க முடிவு!
உலகின் கார் வர்த்தகத்தில் ஜம்பவனாக இருக்கும் நிறுவனம் அமெரிக்காவின் ஃபோர்டு. இந்தியாவில், தாராளமையத்திற்கு இந்திய சந்தை திறந்து விடப்பட்ட பின், 1995-ம் ஆண்டு கார் வர்த்தகத்தை தொடங்கியது அந்நிறுவனம்.
இந்தியாவில் சென்னை, குஜராத் மாநிலத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் உள்நாட்டு தேவை மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இப்படி நீண்டகாலம் கார் வரத்தகத்தில் இருந்து வருகிறது. ஆனாலும் அதன் வர்த்தகத்தில் எதிர்பார்த்தபடி பெரிய அளவிளான லாபத்தை ஈடுட்டமுடியாமல் போனது. அதற்கு கடந்த மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார சரிவும் மிக முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.
இந்த பொருளாதார நெருக்கடியால் வர்த்தகத்தில் இருந்து விலகிக் கொள்ள ஃபோர்டு இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. சந்தையில் நேரடியாக போட்டியிடுவதற்கு பதிலாக, மஹிந்திரா நிறுவனத்துடன் ஒரு புதிய கூட்டு நிறுவமனாக தனது வர்த்தகத்தை இந்திய சந்தைகளில் தொடர முன்வந்துள்ளது. மேலும் அடுத்தவாரத்தில் இந்த புதிய நிறுவனம் குறித்த அறிவுப்புகள் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, மஹிந்திரா போர்டு என்ற பெயரில் அந்த புதிய நிறுவனம் செயல்பட உள்ளதாகவும், அதில் ஃபோர்டு நிறுவனம் 49 சதவீத பங்குகளையும், மஹிந்திரா 51 சதவீத பங்குகளையும் பிரித்துக் கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டு நிறுவனத்தின் சில முக்கிய முடிவுகளை ஃபோர்டு கைவசம் வைத்திருக்கும் என்று தெரிகிறது.
அதுமட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள இரண்டு கார் ஆலைகள் உள்ளிட்ட ஃபோர்டு நிறுவனத்தின் சொத்துக்கள் மஹிந்திரா ஃபோர்டு கூட்டு நிறுவனம் வசம் பொதுவாக்கப்படுகிறது. எனினும், எஞ்சின் உற்பத்தி ஆலை போன்ற சில சொத்துக்களை தன் வசம் வைத்துக் கொள்ள ஃபோர்டு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேப் போல கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும், கார் விற்பனை மற்றும் உற்பத்தியை முற்றிலுமாக கைவிட்டது. அதன் தொடர்ச்சியாக ஃபோர்டு நிறுவனமும் நேரடி வர்த்தகத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !