India
கார் உற்பத்தி நிறுத்தத்தை நீட்டித்த மஹிந்திரா : வேலையில்லாமல் திண்டாடும் ஊழியர்கள்!
இந்திய பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதால் ஆட்டோ மொபைல் துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இதனால், நாட்டின் முன்னணி நிறுவனங்களான மாருதி, அசோக் லேலாண்ட், டிவிஎஸ் போன்றவை ஜிஎஸ்டி உயர்வு, பிஎஸ்6 எமிஷன் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் கார் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
அதுபோல, மஹிந்திரா நிறுவனத்திலும் ஜூலை முதல் செப்டம்பர் வரை 8 முதல் 14 நாட்கள் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்படுவதாக அதன் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஏற்கெனவே தெரிவித்திருந்தார். தற்போது உற்பத்தி நிறுத்தத்தை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து 17 நாட்களாக அறிவித்துள்ளது மஹிந்திரா நிறுவனம்.
வாகனங்கள் தேவைக்கு ஏற்ப உள்ளதாலும் புதிய வாகன தயாரிப்புக்கான தேவை இல்லை என்பதாலும் உற்பத்தி நிறுத்த காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!