India
இதுவரை காணாத சரிவை சந்தித்த ஏற்றுமதி இறக்குமதி; கடும் வர்த்தக பற்றாக்குறையில் இந்தியா!
நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலையால் மோட்டார் வாகனத்துறை உள்ளிட்ட பல துறைகள் ஆட்டம் கண்டுள்ளன. இதனால் ஏராளமான தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது.
பெட்ரோலியம், பொறியியல், தோல், நவரத்தினங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஏற்றுமதி குறைந்துவிட்ட காரணத்தால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 6.5 சதவிகிதம் சரிந்து 1.86 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இதேபோல, இறக்குமதியும் 13.45% அளவுக்கு சரிந்து, 2.81 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு தற்போது ஏற்பட்டுள்ள ஏற்றுமதி, இறக்குமதி சரிவே குறைந்த அளவு என்றும் தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஏற்றுமதி 1.53 சதவிகிதமும், இறக்குமதி 5.68 சதவிகிதமும் குறைந்துள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!