India
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்புக்கு வந்த கார் மோதி 6 வயது சிறுவன் பலி!
ராஜஸ்தான் ஆல்வார் மாவட்டத்தின் திஜாராவில் உள்ள துறவியை சந்திக்க நேற்று அங்கு சென்றுள்ளார் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத்.
திஜாராவில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆல்வார் மாவட்டத்துக்கு மோகன் பகவத் திரும்பியுள்ளார். அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், மோகன் பகவத்தின் காருக்கு முன்னும் பின்னும் 10க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்துச் சென்றன.
அந்த சமயத்தில், பெஹ்ரோர் பகுதி வழியாகச் சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மற்றும் சிறுவன் மீது மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் ஒன்று மோதியுள்ளது.
கார் மோதியதில், இருசக்க வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த 6 வயது சிறுவன் தூக்கி விசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். முதியவரும் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து முதியவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பிறகு, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த மாண்டவார் போலிஸார், மோகன் பகவத்தின் பாதுகாப்பு காரை பறிமுதல் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!