India
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்புக்கு வந்த கார் மோதி 6 வயது சிறுவன் பலி!
ராஜஸ்தான் ஆல்வார் மாவட்டத்தின் திஜாராவில் உள்ள துறவியை சந்திக்க நேற்று அங்கு சென்றுள்ளார் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத்.
திஜாராவில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆல்வார் மாவட்டத்துக்கு மோகன் பகவத் திரும்பியுள்ளார். அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், மோகன் பகவத்தின் காருக்கு முன்னும் பின்னும் 10க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்துச் சென்றன.
அந்த சமயத்தில், பெஹ்ரோர் பகுதி வழியாகச் சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மற்றும் சிறுவன் மீது மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் ஒன்று மோதியுள்ளது.
கார் மோதியதில், இருசக்க வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த 6 வயது சிறுவன் தூக்கி விசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். முதியவரும் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து முதியவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பிறகு, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த மாண்டவார் போலிஸார், மோகன் பகவத்தின் பாதுகாப்பு காரை பறிமுதல் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !