India
“கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும்” - மத்திய இணையமைச்சர் அஸ்வினிகுமார் செளபே பேச்சு!
கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சைக் கருவிகள் செயல்பாட்டை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் சௌபே தொடங்கி வைத்தார். அங்கு நடைபெற்ற "புற்றுநோய்க்கு எதிரான போர்" விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகள் துவங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மருத்துவ சீட்டுகள் கிடைக்கும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
சேலம், மதுரை, தஞ்சாவூர் ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா, சித்தா போன்றவற்றை ஊக்குவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும். அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன'' எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!