India
நிதி நெருக்கடியால் திணறும் தொலைதொடர்புத்துறை : 80,000 பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு!
தொலைத்தொடர்பு துறையில் அம்பானியின் ஜியோ நிறுவனம் அசுர வளர்ச்சியை எட்டியதால், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை கொடுப்பதில் திணறி வருகிறது. கடும் நிதி நெருக்கடியில் அந்நிறுவனம் சிக்கி தவித்து வருகிறது.
இதனையடுத்து, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை வாடகைக்கும், குத்தகைக்கும் விட்டு வருமானத்தை ஈட்ட திட்டமிட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல்-க்கு சொந்தமான 68 ஆயிரம் கோபுரங்களில் 13 முதல் 14 ஆயிரம் கோபுரங்கள் மற்ற நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், மேலும் சில கோபுரங்களை குத்தகைக்கு விடவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம் நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 70 முதல் 80 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வளிக்க திட்டமிட்டு இதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் மின்சார பயன்பாட்டுக்கு மட்டும் 2,700 கோடி செலவிடவுள்ளதால் அதன் பயன்பாட்டையும் 15% குறைக்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது.
தனியாருக்கு பொதுத்துறை நிறுவனங்களை தாரை வார்ப்பதையே மத்திய அரசு குறியாகக் கொண்டுள்ள நிலையில், பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வளிக்கும் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!