India
நர்மதை நதிக்கரை மக்களுக்காக தொடர் உண்ணாவிரதம் : மேதா பட்கரின் உடல்நிலை பாதிப்பு!
சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர், நர்மதா அணை விவகாரம் தொடர்பாக இடம்பெயர்வு செய்யப்படுபவர்களின் நிலையை எடுத்துக்கூறும் விதமாக கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதை நதிக்கரை அருகே வாழ்ந்துவரும் 32 ஆயிரம் மக்கள் அகற்றப்படுவதை எதிர்த்தும், சர்தார் சரோவர் அணை மதகுகளைத் திறந்து, வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் மேதா பட்கர்.
மத்திய பிரதேச மாநிலம் பட்வானி மாவட்டத்தில் சோட்டாபடா கிராமத்தில் 5 பெண்களுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் மேதா பட்கர். தற்போது இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 1,000 பேர் இணைந்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த சனிக்கிழமையன்று மேதா பட்கரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனாலும், கடும் உடல்நிலை பாதிப்புக்கு மத்தியிலும் இன்று (திங்கட்கிழமை) அவரது உண்ணாவிரதம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.
Also Read
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!