India
1000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்த நீதிமன்ற உத்தரவு : கொந்தளிக்கும் டெல்லி மக்கள்!
டெல்லியில் உள்ள ஷாஜகான்பாத் பகுதியில் அமைந்துள்ளது தரியாகஞ்ச் பகுதி. இங்கு ஞாயிறுதோறும் டெல்லி முழுவதும் இருந்து வரும் நூற்றுக்கணக்கான பழைய புத்தக வியாபாரிகள் கடை போடுவார்கள். இங்கு உலகில் உள்ள அனைத்து மொழி புத்தகங்களும் கிடைக்கும். இந்தியாவின் பிரபல எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் முதல் கல்லூரி மாணவர்கள் என லட்சக்கணக்கானோர் புத்தகங்கள் வாங்க இங்கு கூடுவர்.
டெல்லியின் பல்வேறு அடையாளங்களில் மிக முக்கியமான ஒன்றாக இருந்துவரும் தரியா கஞ்ச் புத்தக சந்தை இனி நடைபெறாது. இதற்குக் காரணம், தரியாகஞ்சில் ஞாயிறன்று நடைபெற்று வந்த புத்தகச் சந்தையை இனிமேல் நடத்தக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புத்தகச் சந்தையால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த முடிவால் 50 ஆண்டுகால வரலாறு முடிவுக்கு வருவதாக டெல்லி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நம்பி சுமார் 1,000 குடும்பங்கள் இருக்கின்றன. எனவே, போக்குவரத்தை வேறு வழியில் மாற்றவேண்டும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் புத்தகச் சந்தைக்குப் பயன்படுத்த ஒரு மைதானத்தை வழங்கி புத்தகச் சந்தையை மீண்டும் உயிர்பெற வைக்கவேண்டும் டெல்லி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
முன்னதாக, 1990ம் ஆண்டில் இந்த சந்தை மூடப்பட்டது. ஆனால் பொதுமக்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்த சந்தை மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!