India
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபா உறுப்பினராகிறார்- ராஜஸ்தானில் இன்று மனுத்தாக்கல்!
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பத்தாண்டு காலம் நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் டாக்டர் மன்மோகன் சிங். ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னராக பதவி வகித்த பொருளாதார வல்லுனரான மன்மோகன் சிங், நிர்வாகத்திறன்மிக்க ஆளுமையாக திகழும் அவர் ராஜ்யசபா உறுப்பினராக அசாம் மாநிலத்தில் இருந்து தொடர்ந்து தேர்வாகி வந்தார்.
கடந்த 1991 முதல் 2019 வரை தொடர்ந்து 5 முறை அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், 2004 முதல் 2014 வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.
இந்த நிலையில், இந்தமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு அவர் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை இன்று அவர் தாக்கல் செய்தார். ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கேலாட், துணை முதல் மந்திரி சச்சின் பைலட் ஆகியோர் முன்னிலையில் இன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் மாநில சட்டசபை சபாநாயகரிடம் வேட்புமனுவை அளித்தார்.
தற்போது ஆறாவது முறையாக ராஜ்யசபைக்கு தேர்வு செய்யப்படும் டாக்டர் மன்மோகன் சிங், 2024-ம் ஆண்டு ஏப்ரல் வரை ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை வகிப்பார்.
Also Read
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!
-
“காங்., திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது.. எனவே...” - செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்!
-
வேகமாக நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : எங்கு, எப்போது கரையை கடக்கிறது தெரியுமா?