India
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரடியாக பார்வையிட்டார் வயநாடு எம்.பி. ராகுல்காந்தி!
தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கேரள மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தாலும், நிலச்சரிவுகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், கேரளாவில் மழை பாதிப்பால் 62 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கனமழையால் கோழிக்கோடு, மலப்புரம், ஆழப்புழா, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பியான ராகுல் காந்தி, கேரளாவுக்கு சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.
நிலம்பூர், வண்டூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டது மட்டுமல்லாமல், மழை மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், நிலம்பூர், எடவனப்பாரா ஆகிய பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களையும் சந்தித்து பேசினார்.
மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு தீவிரபடுத்தவேண்டும் எனவும், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என அரசிடம் ராகுல்காந்தி வலியுறுத்தியதாக ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?