India
வாரிச் சுருட்டிய நிலச்சரிவு - கேரள மழை வெள்ளத்தில் கிராமமே அழிந்து போன சோகம்!
தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நதிகள் அனைத்தும் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழை வெள்ளத்தால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ளோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் 4 நாட்களில் 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள புதுமலை பகுதியில் தான் அதிக முறை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு ஹாரிசன்ஸ் என்ற தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. தோட்டத்தில் பணிபுரியும் மக்கள் உட்பட மொத்தம் 60 குடும்பங்கள் அங்கு வசித்து வந்தனர்.
கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் புதுமலை கிராமமே மொத்தமாகச் சரிந்தது. நிலச்சரிவால் அங்கிருந்த வீடுகள் இருந்த இடம் தெரியாமல் போனது. ஒரு கிராமம் இருந்ததற்கான அடையாளமே தெரியாத அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்த 63 வீடுகளில், இப்போது எட்டு வீடுகள் மட்டுமே உள்ளன. இதுவரை 18 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவிலிருந்து தப்பிய கிராமவாசி ஒருவர் "புதுமலை கிராமம் இப்போது இல்லை" என்று பேரதிர்ச்சியுடன் கூறுகிறார். மேலும் 15-20 பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருக்கலாம் என்று கிராம மக்கள் அஞ்சுகின்றனர்.
Also Read
-
பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !
-
பெண்கள் குறித்து ஆபாச கருத்து : வழக்கை சந்திக்குமாறு பாஜக பிரமுகர் H ராஜாவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம் !
-
3 நாட்களில் 3 சம்பவங்கள்... போதைப்பொருளின் தலைநகரம் என்று நிரூபிக்கும் குஜராத்... விவரம் என்ன?
-
துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !
-
எல்லாம் தெரிந்தும் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்த மோடி : வெளிவந்த அதிர்ச்சி உண்மை!