India
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
சென்னை சேலம் இடையே 276 கி.மீ., தொலைவிற்கு 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1,900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.
இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்ற பிறகே நெடுஞ்சாலைப் பணிகள் தொடங்கப்படும் என்றார். நிலத்தை கையகப்படுத்திய பின்னரே அந்த அனுமதிகளைப் பெறமுடியும் என்பதால் தடையை நீக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு விவசாயிகள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததோடு வழக்கின் ஆவணங்கள் வழங்கப்படவில்லை என்றும் கூறினர். இதையடுத்து, மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலும், விவசாயிகளுக்கு ஆவணங்களை உடனடியாக வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியிருப்பதால் விசாரணையை வருகிற 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
“3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - 41 புதிய ITI நிலையங்கள் ” : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
-
அமெரிக்க பொருட்களுக்கு 0% வரி; இந்திய பொருட்களுக்கு 18% வரியா? - கனிமொழி MP கேள்வி!