India
அவசர அவசரமாக நிறைவேற்றப்படும் மசோதாக்கள் : ராஜ்யசபா தலைவருக்கு எதிர்க்கட்சி எம்.பிகள் கடிதம்!
மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்பாக வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் போதிய விவாதங்கள் இன்றி அவசர அவசரமாக நிறைவேற்றப்படுவதாக 17 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-கள் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாடுயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நடப்பு மக்களவைத் தொடரில், என்.ஐ.ஏ சட்டத்திருத்த மசோதா, தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 14 மசோதாக்கள் எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தின் போது, முக்கிய மசோதாக்களை நாடாளுன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால், இதை மத்திய அரசு ஏற்க மறுத்தது. இதனால், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்படாமலேயே மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தநிலையில், இது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு திருச்சி சிவா, வைகோ, உள்ளிட்ட 17 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்படாமல் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Also Read
-
"களத்தில் என்ன செய்யவேண்டும் என எனக்கு தெரியும்" - விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி !
-
”போராடி பெற்ற நமது உரிமைகளை பறிக்கும் மோடி அரசு” : தீஸ்தா சீதல்வாட் குற்றச்சாட்டு!
-
"திறமையற்ற தலைவர் மோடி" - இந்திய பயணத்தை ஒத்திவைத்து சீன பிரதமரை சந்திக்க சென்ற எலான் மஸ்க் !
-
”பொய் மட்டுமே பேசும் ஒரே தலைவர்” : பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி!
-
”தேர்தல் ஆணையம் மீதே சந்தேகங்கள் அதிகம் இருக்கு” : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?