India
பசுக்களுக்கு ‘மசாஜ்’ செய்தால் சுவாச பிரச்னை வராது : பா.ஜ.க முதல்வரின் வியக்க வைக்கும் அறிவியல் அறிவு
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக திரிவேந்தர சிங் ராவத் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் திரிவேந்தர சிங் ராவத் டேராடூனில் நேற்று விழா ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், விலங்குகளில் பசுக்கள் மட்டுமே ஆக்ஸிஜனை உள்ளிழுப்பது மட்டுமல்லாமல் அதை வெளியேற்றவும் செய்வதாகத் தெரிவித்தார். மேலும், பசுக்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம் மனிதர்களின் சுவாச பிரச்னைகளிலிருந்து விடுபட முடிவதாகவும், அதேசமயம் பசுவுடன் நெருக்கமாக வாழ்வதால் காசநோயைக் குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
முதல்வரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே முதல்வர் திரிவேந்தர சிங் ராவத் பேச்சு குறித்து விளக்கம் அளித்த முதல்வர் அலுவலகம் “பசுக்கள் ஆக்ஸிஜனை வெளியிடுவதாக மக்கள் நம்புகிறார்கள். எனவே மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தான் முதல்வர் அவ்வாறு பேசியிருந்தார்” என்று தெரிவித்துள்ளது.
Also Read
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!