India
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2 : முதல்கட்டம் வெற்றி!
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இன்று விண்ணில் ஏவியது.
சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த வாரமே விண்ணில் ஏவத் திட்டமிட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் திட்டம் தள்ளிப்போனது. ஏவுகணையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவப் பகுதியில், கனிம வளங்கள் மற்றும் மக்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள,சந்திரயான்-2 என்ற விண்கலத்தை, இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலத்தை சுமந்தபடி, ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 எம்-1 ஏவுகணை விண்ணில் பாய்ந்தது.
இதற்கான, 'கவுன்ட் டவுன்' நேற்று மாலை 6:43 மணிக்கு துவங்கியது. இன்று பிற்பகல், சரியாக 2:43 மணிக்கு விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2. சந்திரயான் 2 திட்டமிடப்பட்டபடி புவி வட்டப் பாதையைச் சென்றடைந்தது.
சந்திரயான்-2 விண்கலம், 48 நாட்களில் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும். நிலவின் தென் துருவத்தில்,சந்திரயான் -2 விண்கலம் ஆய்வு செய்ய உள்ளதால், விஞ்ஞான ரீதியாக அதிக தகவல்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து நிலவில் தரையிறங்கிய நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடம்பெறும். ஆனால் நிலவில் இதுவரை யாரும் ஆராய்ந்திடாத தெற்குப் பகுதியில் இறங்கப்போகும் முதல் விண்கலம் சந்திராயன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
உலக தரத்தில் ரூ.20 கோடியில் ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
பள்ளி கட்டடம் முதல் பேருந்து நிலையம் வரை : சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்!
-
“இது எண்ணிக்கைக்கான கூட்டணி அல்ல! எண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய ரோஜா!