India
பிரியங்காவுக்கு நெல்சன் மண்டேலா சொன்ன விஷயம்!
கறுப்பின மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த நெல்சன் மண்டேலாவின் 101-வது பிறந்த தினம் இன்று. நிறவெறிக்கு எதிராகப் போராடிய மண்டேலாதான் தென் ஆப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர்.
இந்நிலையில், நெல்சன் மண்டேலாவின் பிறந்ததினத்தன்று அவரை நினைவுகூர்ந்து, அவரை மிஸ் செய்வதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது :
“எனது உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் உள்ள தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, வேறுயாரும் சொல்வதற்கு முன்பே, நான் அரசியலில் ஈடுபடவேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “உலகம் மண்டேலா போன்றவர்களை முன்னெப்போதையும்விட இப்போது அதிகமாக இழந்துவிட்டதாக உணர்கிறது. அவரது வாழ்க்கை உண்மை, அன்பு மற்றும் சுதந்திரத்திற்கு ஒரு சான்றாகத் திகழ்ந்தது.” எனத் தெரிவித்துள்ளார் பிரியங்கா.
Also Read
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!
-
”வாக்கு திருடர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்” : மீண்டும் ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!