India
பிரியங்காவுக்கு நெல்சன் மண்டேலா சொன்ன விஷயம்!
கறுப்பின மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த நெல்சன் மண்டேலாவின் 101-வது பிறந்த தினம் இன்று. நிறவெறிக்கு எதிராகப் போராடிய மண்டேலாதான் தென் ஆப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர்.
இந்நிலையில், நெல்சன் மண்டேலாவின் பிறந்ததினத்தன்று அவரை நினைவுகூர்ந்து, அவரை மிஸ் செய்வதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது :
“எனது உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் உள்ள தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, வேறுயாரும் சொல்வதற்கு முன்பே, நான் அரசியலில் ஈடுபடவேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “உலகம் மண்டேலா போன்றவர்களை முன்னெப்போதையும்விட இப்போது அதிகமாக இழந்துவிட்டதாக உணர்கிறது. அவரது வாழ்க்கை உண்மை, அன்பு மற்றும் சுதந்திரத்திற்கு ஒரு சான்றாகத் திகழ்ந்தது.” எனத் தெரிவித்துள்ளார் பிரியங்கா.
Also Read
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!