India
149 வருடங்களுக்குப் பிறகு தோன்றும் அபூர்வ சந்திர கிரகணம்... இன்று இரவு பார்க்கலாம் - மிஸ் பண்ணிடாதீங்க !
மிகவும் அபூர்வமாக நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் இன்று நள்ளிரவு துவங்கி நாளை அதிகாலை (ஜூலை 17) வரை நடைபெற இருக்கிறது. இன்று நடைபெறும் நிகழ்வானது பகுதி நேர சந்திர கிரகணம் மட்டுமே. முழுமையான சந்திர கிரகணம் அடுத்து 2021ம் ஆண்டு நிகழும்.
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது தான் சூரிய, சந்திர கிரகணங்கள் உருவாகின்றன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி பயணிக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் சந்திரகிரகணம் ஏற்படுகிறது.
149 ஆண்டுகளுக்குப் பின் இன்றிரவுதான் இந்த அபூர்வ சந்திர கிரகணம் நிகழ்கிறது. சில நாடுகளில் இன்று இரவு இந்த கிரகணம் ஏற்படும். இந்தியாவில் இன்று நள்ளிரவு 12.12 மணிக்கு தொடங்கி அதிகாலை 1.31 மணிக்கு உச்சம் பெறும். அதிகாலை 4.29 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவுபெறும்.
இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் கூட பார்க்க முடியும். இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும் இந்த சந்திர கிரகணத்தைக் கண்டு களிக்கலாம். பைனாகுலர், டெலஸ்கோப், அல்லது கேமரா வழியாகவும் இதைப் பார்க்கலாம். இதற்குப் பின் இந்தியாவில் 2021ஆம் ஆண்டுதான் அடுத்த முழுமையான கிரகணம் தோன்றும்.
Also Read
-
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு.. பாஜக ஆதரவாளரை கைது செய்த கர்நாடக போலிஸ்... கொந்தளிக்கும் பாஜக தலைவர்கள்!
-
கட்டுகடுங்காத கூட்டம்: உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணிக்கு பெருகும் ஆதரவு -விழிபிதுங்கி நிற்கும் பாஜக!
-
வழிப்பறியில் ஈடுபடும் பாஜகவினர் : இளைஞரணி தலைவர் உட்பட 3 பாஜக நிர்வாகிகள் கைது - வேலூர் போலீஸார் அதிரடி !
-
"குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், புகாரளிக்க தயங்க வேண்டாம்" - சென்னை பெருநகர காவல் துறை!
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!