India
புதிய கல்விக்கொள்கை வரைவின் மீதான கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு !
மே மாதம் 31ம் தேதி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசிடம் புதிய கல்விக் கொள்கை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் மும்மொழி கல்வி திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கைக்கு கல்வியாளர்கள், பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
வரைவின் மீது பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை தெரிவிக்க ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவையில் கோரினார். இதையடுத்து, பொதுமக்கள் கருத்துக்கூற வசதியாக கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல் அளித்துள்ளார்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !