India
புதிய கல்விக்கொள்கை வரைவின் மீதான கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு !
மே மாதம் 31ம் தேதி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசிடம் புதிய கல்விக் கொள்கை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் மும்மொழி கல்வி திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கைக்கு கல்வியாளர்கள், பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
வரைவின் மீது பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை தெரிவிக்க ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவையில் கோரினார். இதையடுத்து, பொதுமக்கள் கருத்துக்கூற வசதியாக கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல் அளித்துள்ளார்.
Also Read
-
“பா.ஜ.க.வைத் தமிழ்நாடு வெறுக்க காரணம் இதுதான்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!
-
“தி.மு.க கூட்டணி மீண்டும் அரியணை ஏறும்” : Poll Tracker வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவு!
-
"அ.தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிய எனக்கு அங்கீகாரம் இல்லை": முன்னாள் சபாநாயகர் தனபால் குமுறல்!
-
“மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் களம் காண்கிறேன்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியாது” : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!