India
3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் கட்டணம் : கனரா வங்கி அறிவிப்பு!
நாட்டின் முன்னணி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்பு போதுமான அளவு பணத்தை கணக்கில் வைத்திருக்கவில்லை என்றால்தான் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
கனரா வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் டெபாசிட் செய்ய கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. 50,000 க்கு மேற்பட்ட தொகைக்கு ஏற்றாற்போல ரூ. 50 முதல் ரூ. 2,500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.
தற்போது ஒரு நபர் தனது கணக்கில் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணம் செலுத்தவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. கனரா வங்கியின் இந்த புதிய அறிவிப்பு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
மாதத்திற்கு 3 முறை மட்டுமே வங்கி கணக்கில் ரூ. 50,000 வரையில் இலவசமாக பணமாக டெபாசிட் செய்ய முடியும். அதன் பிறகு டெபாசிட் செய்யும் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் 1 ரூபாய் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.
பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், நேரடி பணப்பரிவர்த்தனையை குறைக்கவும், ஆன்லைன் பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கையை வங்கி நிர்வாகம் எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
அமைதியை விரும்புவது தமிழ்நாட்டின் D.N.A.. அதைச் சிதைக்க துடிக்கும் NDA - மதுரையில் கர்ஜித்த முதலமைச்சர்!
-
“பழனிசாமியின் தேர்தல் தோல்விகளை கூட எண்ணிவிடலாம், துரோகங்களை எண்ண முடியாது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மோடிஜி Where Is LPG? என்று கேட்கும் மக்களுக்கு பிரதமரின் பதில் என்ன? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
தமிழ் மண்ணில் மும்மொழி கொள்கையை கூறி வாக்கு கேட்க முடியுமா?: தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் சவால்!
-
”கலைஞர் குறித்து பழனிசாமியின் அவதூறு பேச்சு.. கல்லினும் கொடிய மனம் கொண்ட பழனிசாமி” : குவியும் கண்டனங்கள்!