India
கனிமொழி,திருமாவளவன், சு.வெங்கடேசன் எம்.பி.,க்கள் தமிழில் பதவியேற்பு- அதிர்ந்த நாடாளுமன்றம்
17வது மக்களவையின் 2ம் நாள் கூட்டத்தொடர் இன்று நாடாளுமன்றத்தில் கூடுகிறது. 2வது நாளாக இன்று எம்.பி.,க்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.
இதில், தமிழகம், புதுவை, தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 222 பேர் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும், நாளை சபாநாயகருக்கான தேர்வு நடைபெற இருப்பதால் அதற்கான ஆலோசனைக் கூட்டம் பா.ஜ.க நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் யார் என்பதற்கான ஆலோசனைக் கூட்டமும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, ஜெயராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 37 எம்.பி.,க்கள் தமிழில் பதவியேற்றனர். சமஸ்கிருதம், ஹிந்திக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் அவையில், தமிழக எம்.பி.,க்கள் தமிழில் பதவியேற்றது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!