India
புழுதிப் புயலுக்கு 26 பேர் பலி : உத்தர பிரதேசத்தில் சோகம்!
உத்தர பிரதேசத்தில் கடந்த 2 நாட்களாக கடுமையான புழுதிப் புயல் வீசி வருகிறது. புழுதிப் புயலுக்கு 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 57 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களாகப் புழுதிப் புயலின் தாக்கம் உத்தர பிரதேசத்திலும் நேபாளத்திலும் அதிகமாகக் காணப்பட்டது. இதன் கோரத் தாக்குதலுக்கு 26 பேர் பலியாகியுள்ளனர். மேலும், கால்நடைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. பலரின் கால்நடைகள் உயிரிழந்ததுடன், 20-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
புழுதிப் புயல் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்திலும் புழுதிப்புயல் உருவாக வாய்ப்புள்ளதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் 17 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
‘பி.எட்.’ மற்றும் ‘எம்.எட்.’ பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை! : விண்ணப்பிப்பதற்கான விவரம் உள்ளே!
-
வக்ஃபு சட்டத்தின் முக்கிய பிரிவுகளுக்கு தடை... "மக்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும்"- முதலமைச்சர் வரவேற்பு!
-
வக்ஃபு சட்டத்தின் முக்கிய பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை... இஸ்லாமிய அமைப்புகள் வரவேற்பு !
-
“பாஜகவிடம் அடிமையாக அதிமுக இருப்பதற்கான காரணம் இதுதான்...” - தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. பேச்சு!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டம் - புதிய திட்டத்தின் சிறப்பு என்ன?