India
மோடி பரப்பும் வெறுப்பை அன்பால் எதிர்கொள்வோம் - வயநாட்டில் ராகுல்காந்தி பேச்சு!
அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி, வயநாடு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், கேரளாவின் வயநாடு தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியை பெற்றார்.
இதனையடுத்து, தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
அப்போது மக்களைச் சந்திப்பதற்காக திறந்த வேனில் சென்று நன்றி தெரிவித்தார் ராகுல்காந்தி. பின்னர் மக்களிடையே பேசிய அவர், நாட்டு மக்கள் மீது மோடியின் அவரது தலைமையின் கீழ் உள்ள அரசும் உமிழ்ந்துவரும் வெறுப்பை அன்பாலும், பாசத்தாலும் எதிர்கொள்ளவதை காங்கிரஸ் தெரிந்து வைத்துள்ளது என கூறினார் ராகுல்காந்தி.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!