India
அக்னி நட்சத்திரம் முடிந்தும் வாட்டி வதைக்கும் வெயில்... வட மாநிலங்களின் கதி என்ன?
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் மேற்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், தமிழகத்தில் அக்னி வெயில் நிறைவடைந்தாலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையாமலேயே காணப்படுகிறது.
திருவள்ளூர், வேலூர், சேலம், மதுரை, திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட வெயிலின் அளவு 3-4 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட மோசமாகவே அதிகரித்துள்ளது.
குறிப்பாக டெல்லியில் நிலவும் கடும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் மக்கள் எவரும் வெளியே செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது டெல்லியில் 45 டிகிரிக்கும் மேல் நிலவும் வெப்பநிலை இன்னும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களிலும் டெல்லியை போன்றே வெயில் வாட்டி வதைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!