India
பர்தா அணிந்து வந்த முஸ்லிம் மாணவியிடம் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கத்தி அச்சுறுத்திய இளைஞர்கள்!
மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பெங்கால் மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் உடையணிந்த முஸ்லிம் பெண் ஒருவரை நோக்கி 10-12 இளைஞர்கள் குழுவாக சென்று ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூச்சலிட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இது குறித்து அந்த பெண் கூறியதாவது, “நானும் எனது தோழியும் இரவு உணவு முடித்துவிட்டு 10 மணிக்கு கேண்டீனிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தோம். அப்போது அங்கிருந்த ஆண்கள் எங்களை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூச்சலிட ஆரம்பித்தனர். உடனே நாங்கள் அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டோம். எங்கள் கல்லூரியில் இதற்கு முன்பு இதுபோன்று நடந்ததில்லை. நான் ஒரு ஹிஜாப் அணியும் முஸ்லிம். இதுபோன்ற தொந்தரவை என் வாழ்க்கையில் இதுவரை சந்தித்ததில்லை” என்று அச்ச உணர்வோடு பேசுகிறார்.
மாட்டுக்கறி வைத்திருந்ததாக கட்டி வைத்து அடிப்பது, குல்லா அணிந்திருந்தால் தாக்குவது, ‘முஸ்லிம் என்றால் பாகிஸ்தானுக்கு போ’ என்று அச்சுறுத்துவது என, பா.ஜ.க வெற்றி பெற்ற 6 நாட்களுக்குள் சிறுபான்மையினர் மீது நடைபெறும் ஆறாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”
-
இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைக்கிறாரா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
“அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மேகதாது அணை முயற்சியைத் தடுப்போம்!” : உதயநிதி!