India
சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக 78 பெண் எம்.பி.,க்கள் : நிறைவேறுமா 33% மகளிர் மசோதா ?
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் கடந்த மே 23ல் வெளியானது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எனவே, அந்த கூட்டணியே மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கிறது.
இதற்கிடையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடுமுழுவதும் 716 பெண்கள் போட்டியிட்டனர். அதிகபட்சமாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து 54 பெண்கள் வேட்பாளராக களம் கண்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மொத்தம் போடியிட்ட 716 பெண்களில், 78 பெண்கள் எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1952ம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கு, வெறும் 5 சதவிகிதமாக இருந்தது. தற்போது அது, 14 சதவிகிதத்தை எட்டியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், அதிக எம்.பிக்களை நடப்பு மக்களவை கொண்டிருப்பது வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.
ஆனால் இன்றளவும், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமசோதா நிறைவேற்றப்படாத நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் ஜோதிமணி ஆகிய 3 பெண்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பி வைக்கிறது தமிழகம்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!