India
சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக 78 பெண் எம்.பி.,க்கள் : நிறைவேறுமா 33% மகளிர் மசோதா ?
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் கடந்த மே 23ல் வெளியானது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எனவே, அந்த கூட்டணியே மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கிறது.
இதற்கிடையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடுமுழுவதும் 716 பெண்கள் போட்டியிட்டனர். அதிகபட்சமாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து 54 பெண்கள் வேட்பாளராக களம் கண்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மொத்தம் போடியிட்ட 716 பெண்களில், 78 பெண்கள் எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1952ம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கு, வெறும் 5 சதவிகிதமாக இருந்தது. தற்போது அது, 14 சதவிகிதத்தை எட்டியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், அதிக எம்.பிக்களை நடப்பு மக்களவை கொண்டிருப்பது வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.
ஆனால் இன்றளவும், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமசோதா நிறைவேற்றப்படாத நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் ஜோதிமணி ஆகிய 3 பெண்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பி வைக்கிறது தமிழகம்.
Also Read
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!