India
ஆந்திர சட்டசபைத் தேர்தல் : ஜகன்மோகனிடம் ஆட்சியைப் பறிகொடுக்கிறாரா சந்திரபாபு நாயுடு ?
நாடு முழுவதும் 17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்தது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதும் நடந்து வருகிறது.
மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு, அதற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஆந்திராவில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 85 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க 88 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டியுள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 85 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 30 தொகுதிகளிலும் , பா.ஜ.க 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 2 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அருணாச்சல் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 10 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் எஸ்.டி.எப் கட்சி 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!