India
ஆந்திர சட்டசபைத் தேர்தல் : ஜகன்மோகனிடம் ஆட்சியைப் பறிகொடுக்கிறாரா சந்திரபாபு நாயுடு ?
நாடு முழுவதும் 17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்தது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதும் நடந்து வருகிறது.
மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு, அதற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஆந்திராவில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 85 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க 88 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டியுள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 85 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 30 தொகுதிகளிலும் , பா.ஜ.க 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 2 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அருணாச்சல் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 10 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் எஸ்.டி.எப் கட்சி 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!