India
ஆந்திர சட்டசபைத் தேர்தல் : ஜகன்மோகனிடம் ஆட்சியைப் பறிகொடுக்கிறாரா சந்திரபாபு நாயுடு ?
நாடு முழுவதும் 17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்தது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதும் நடந்து வருகிறது.
மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு, அதற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஆந்திராவில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 85 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க 88 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டியுள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 85 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 30 தொகுதிகளிலும் , பா.ஜ.க 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 2 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அருணாச்சல் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 10 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் எஸ்.டி.எப் கட்சி 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!