India
ரயில் டிக்கெட் கேன்சல் செய்பவர்களால் ரயில்வேக்கு கோடிக்கணக்கில் லாபம்.. எப்படி தெரியுமா ?
2015-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் பயணச்சீட்டு ரத்து செய்தவர்களிடம் ரயில்வே துறை அடைந்த லாபம் குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரயில் பயணச்சீட்டை ரத்து செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொள்கை முடிவு எடுத்தது மத்திய அரசு. ஆர்.டி.ஐ மூலம் கிடைத்துள்ள தகவலின்படி, கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் பயணச்சீட்டு ரத்து செய்தவர்களிடம் இருந்து ரூ.5,366.53 கோடி ரூபாய் தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையில், கடந்த 2017-2018 நிதியாண்டில், ரயில் பயணச்சீட்டு ரத்து செய்தவர்களிடம் இருந்து ரூ.1,205.96 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2018-2019 நிதியாண்டில், ரூ.1,852.50 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட ரூ.646.54 கோடி அதிகமாகும்.
அதே போல், தெற்கு ரயில்வே துறையில், கடந்த 2017-18ல் 176.76 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2018-19ல், 182.56 கோடியாக உயர்ந்துள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!