India
ரயில் டிக்கெட் கேன்சல் செய்பவர்களால் ரயில்வேக்கு கோடிக்கணக்கில் லாபம்.. எப்படி தெரியுமா ?
2015-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் பயணச்சீட்டு ரத்து செய்தவர்களிடம் ரயில்வே துறை அடைந்த லாபம் குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரயில் பயணச்சீட்டை ரத்து செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொள்கை முடிவு எடுத்தது மத்திய அரசு. ஆர்.டி.ஐ மூலம் கிடைத்துள்ள தகவலின்படி, கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் பயணச்சீட்டு ரத்து செய்தவர்களிடம் இருந்து ரூ.5,366.53 கோடி ரூபாய் தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையில், கடந்த 2017-2018 நிதியாண்டில், ரயில் பயணச்சீட்டு ரத்து செய்தவர்களிடம் இருந்து ரூ.1,205.96 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2018-2019 நிதியாண்டில், ரூ.1,852.50 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட ரூ.646.54 கோடி அதிகமாகும்.
அதே போல், தெற்கு ரயில்வே துறையில், கடந்த 2017-18ல் 176.76 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2018-19ல், 182.56 கோடியாக உயர்ந்துள்ளது.
Also Read
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
“3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - 41 புதிய ITI நிலையங்கள் ” : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
-
அமெரிக்க பொருட்களுக்கு 0% வரி; இந்திய பொருட்களுக்கு 18% வரியா? - கனிமொழி MP கேள்வி!