India
ரயில் டிக்கெட் கேன்சல் செய்பவர்களால் ரயில்வேக்கு கோடிக்கணக்கில் லாபம்.. எப்படி தெரியுமா ?
2015-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் பயணச்சீட்டு ரத்து செய்தவர்களிடம் ரயில்வே துறை அடைந்த லாபம் குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரயில் பயணச்சீட்டை ரத்து செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொள்கை முடிவு எடுத்தது மத்திய அரசு. ஆர்.டி.ஐ மூலம் கிடைத்துள்ள தகவலின்படி, கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் பயணச்சீட்டு ரத்து செய்தவர்களிடம் இருந்து ரூ.5,366.53 கோடி ரூபாய் தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையில், கடந்த 2017-2018 நிதியாண்டில், ரயில் பயணச்சீட்டு ரத்து செய்தவர்களிடம் இருந்து ரூ.1,205.96 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2018-2019 நிதியாண்டில், ரூ.1,852.50 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட ரூ.646.54 கோடி அதிகமாகும்.
அதே போல், தெற்கு ரயில்வே துறையில், கடந்த 2017-18ல் 176.76 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2018-19ல், 182.56 கோடியாக உயர்ந்துள்ளது.
Also Read
-
தி.மு.க வெள்ளை அறிக்கை vs த.வெ.க வெள்ளை அறிக்கை : தி.மு.க IT WING விளக்கம்!
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!