India
வாக்குகளை ஒப்புகைச்சீட்டுகளுடன் 100 சதவீதம் ஒப்பிட்ட முடியாது! உச்சநீதிமன்றம் உத்தரவு
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான முடிவுகள் வருகிற மே 23-ம் தேதி வெளியாக உள்ளது.இதற்கு முன்னதாக நடந்த தேர்தலைப் போல் இல்லாமல் இந்தாண்டு முதல் புதிதாக விவிபேட் (VVPAT) இந்திரங்கள் பயன்படுத்தபட்டு ஒப்புகைச்சீட்டாக பதிவாகும் வகையில் அமைக்கப்படுள்ளது.
இந்நிலையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பிட உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க வாய்ப்பில்லை, அது தொல்லையாக முடியும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையில் எதிர்க்கட்சியினர் 50% ஒப்புகை சீட்டை எண்ணவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தேர்தல் அதிகாரியை இன்று மாலை சந்திக்க உள்ளனர்.
Also Read
-
ரூ.165 கோடியில் கட்டப்பட்டு வரும் 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்! : உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
“நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும்!” : SIR குறித்து எச்சரித்த முரசொலி தலையங்கம்!
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா